![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/BeFunky-collage-49.jpg)
சென்னையில் இன்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். அந்த விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் அனுப்பி விடுக்கப்பட்டது. ஆனால் தவெக தலைவர் விஜயுடன் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கருவியாக காய் நகர்த்தும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமாக இருக்கிறாரா? அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா?
இன்று திருமாவளவன் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? இல்லை கூட்டணி சிறப்பு செய்கிறாரா? நாம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் இன்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ அதேபோல முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சருக்கு பயந்து தான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார். இரண்டு பேரையுமே தவறிழைத்தவர்களாக தான் நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார்