
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இருப்பினும் பிரசாத் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி காதலித்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பிரசாத் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது உறுதியானது. இதனால் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதை அறிந்த பிரசாத் தனது நண்பர்கள் உதவியுடன் பல இடங்களுக்கு மாறி மாறி 20 நாட்களாக போக்கு காட்டியுள்ளார்.
கடைசியாக கே.வி குப்பம் அருகே ஒரு குகையில் பதுங்கி இருந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்களான சூர்யா, விஜய் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் பிரசாத்துக்கு உதவிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.