சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் புளியந்தோப்பு காந்திநகர் ஐந்தாவது தெருவில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே யோசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கமலக்கண்ணன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இதனை பார்த்து கோபமடைந்த மீனாவின் தம்பி ரஜினி கமலக்கண்ணனின் முகத்தில் மிளகாய் பொடி தூவி உள்ளார். அதன் பிறகு இரும்பு கம்பியால் கமலக்கண்ணனை சரமாரியாக தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த கமலக்கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரஜினியை கைது செய்தனர்.