அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அக்னிபத் திட்டம் செப்டம்பர் 2022 முதல் செயல்படுத்தபட்டது.

இந்திய முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணிபுரியலாம். இதற்கு முதலில் உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை கடைசியாக எழுத்துத்தேர்வு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நிர்வாக செலவுகளை குறைக்க, தேர்வர்கள் முதலில் எழுத்துத்தேர்வு CEE எழுத வேண்டும், தேர்வாகும் நபர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என மாற்றத்தை கொண்டுவந்துள்ளது ராணுவம்.