தெலுங்கானா மாநிலத்தில் டிராபிக் போலீஸ் மற்றும் வாகனம் போன்ற ஒரு கட்டவுட் வைத்துள்ளனர். இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர் உண்மையான போலீஸ் நிற்பதாக எண்ணி அவசரமாக ஹெல்மெட்டை எடுத்து போடுகிறார். அதன் பின் அவர் பக்கத்தில் வந்தார். அப்போதுதான் அது உண்மையான போலிஸ் இல்லை வெறும் கட்டவுட் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்தியாவில் சாலை விபத்துகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது விபத்துகளை தடுக்கும் நோக்கில் தற்போது போலீசார் போன்று கட்டவுட் வைத்துள்ள புது முயற்சி பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.