தருமபுரி மாவட்டத்தில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு  தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் அந்த மாணவியை ஆசிரியர் சரவணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்த மனைவி புகார் அளித்துள்ளார்.

முதலில் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.