![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/07/f59c2657-e7a6-4b37-8a68-ff9584df8845.-.jpeg)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியுடன் கடையில் ஒன்றாக ஜூஸ் குடித்துள்ளார். இதை சிறுமியின் தந்தையான 50 வயது வழக்கறிஞர் பிரஜ் நாராயண் நிஷாத் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது சகோதரருடன் இணைந்து சிறுவனை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து கொடூரமாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சிறுவானுடைய பெற்றோருக்கும் போன் செய்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பண்ணை வீட்டில் இருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர் சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய சகோதரரை கைது செய்துள்ளனர்.