தமிழகத்தில்  கடந்த சில நாட்களாகவே பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் என்று பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம். அதே சமயம் அவ்வப்போது சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வரும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது.

அந்த வகையில் சென்னை ராமபுரத்தில் வீட்டில் பூஜை செய்ய சென்ற பூசாரி ஒருவர் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த புகாரில் போக்சோ சட்டத்தில் பூசாரி ஹரிஷ், உதவியாளர்கள் சதீஷ்குமார், விஜி (எ) ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.