
விஜய் டிவியில் காமெடி ஷோ மூலம் பிரபலமாகி கடி ஜோக்குகளை கூறி மக்களை சிரிக்க வைத்து வருபவர் மதுரை முத்து. சமீபத்தில் கூட இவர் தன்னுடைய தாய் மற்றும் தந்தை மற்றும் முன்னாள் மனைவிக்கு ஒரு கோவில் கட்டி வந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வந்தது. பலரும் பாராட்டி வந்தார்கள். தற்போது மதுரை முத்து தனக்கு இருக்கும் இன்னொரு ஆசை குறித்து பேசியுள்ளார். அதாவது அவரது இன்னொரு ஆசை என்னவென்றால் ஒரு ஏழு எட்டு அறைகள் கட்டி தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகளை அங்கேயே தங்க வைத்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை தானாம்.
அதே மாதிரி நம்ம சக்திக்கு தகுந்தார் போல் முதியோர்களையும் தங்க வைக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. ஒரு நூலகம் உருவாக்கி வீட்டில் ஒரு 7000, 8000 புத்தகங்களை வைத்துள்ளேன். அந்த புத்தகங்களை இங்கே வைத்து அந்த பசங்களை படிக்க வைப்பதற்கு ஒரு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.