உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் கால் நடுக்க நின்ற பொருட்கள் வாங்கும் காலம் முடிந்து தற்போது இதற்காக தானியங்கி ஏடிஎம் அமைக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தானியங்கி ரேஷன் கடை ஏடிஎம்களில் ரேஷன் அட்டைகளை பதிவு செய்தால் உடனே தேவையான பொருட்கள் கிடைக்கும். கைரேகையை பதிவு செய்தவுடன் ஏ டி எம் மூலமாக பொருட்கள் வந்து சேரும். இது முதல் கட்டமாக வாரணாசி நொய்டா ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அவைகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 7 நிமிடத்தில் இந்த இயந்திரங்கள் பயனாளர்களுக்கு பொருள்களை சரியான எடையில் வழங்கும். இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாது எனவும் இந்த இயந்திரங்களை மாநிலம் முழுவதும் அமைக்க உத்திர பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.