சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “xyz_z0ne” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் புத்தம் புதிய வாஷிங் மெஷினுக்குள் துணிகள் இல்லாமல் பெரிய கல்லை போட்டுவிட்டு மெஷினை இயக்குகிறார். மெஷின் இயங்கத் தொடங்கியதும், கல்லின் எடையால் மெஷின் மிகுந்த அதிர்வுடன் வேலை செய்ய தொடங்குகிறது.

முன்னதாக சில விநாடிகளில் மெஷின் வலிமையாக அதிர்ந்ததும், திடீரென அதன் உட்பகுதி பிதுங்கி வெளியே உருண்டு சென்றது. மெஷின் உட்பகுதிகளும்  உடைந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் 76,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்று வைரலாகியுள்ளது. சிலர் இந்த செயலை கிண்டலாகவும், நகைச்சுவையுடனும் பார்த்திருந்தாலும், பெரும்பாலானோர் முடிவில்லா வீண்செலவாகவும், ஆழ்மனதிலுள்ள வன்கொடுமை போல் பார்வையிட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by XYZ ZONE (@xyz_z0ne)

சமூக ஊடகங்களில் பாபுலராக வேண்டும் என்ற ஆசையில் சிலர் எவ்வளவு அபத்தமான மற்றும் அபாயகரமான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான விளக்கம் தான் இந்த வீடியோவாக மாறியுள்ளது. இணையத்தில் புகழ் தேடும் பெயரில் சேதமும் வீணாக்கமும் உருவாகும் இந்த “வைரல் கலாசாரம்” தொடரும் பட்சத்தில், இது போன்ற செயல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக சமூக ஊடக பயனாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.