கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் முருகேசன் இவருடைய மகன் ராம்குமார். 26 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும் சுஜாதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.  இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை ராம்குமார் தலையில் ரத்த காயத்தோடு கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் திருமணமானது முதலே கணவன் மனைவிக்கு இடையே தவறாக ஏற்பட்டு வந்துள்ளதால் சுஜாதா கணவன் மீது கோபத்தில் இருந்துள்ளார் .இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றதால் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்து தன்னுடைய நண்பர்களான கணேசன், மோகன் ஆகியோரின் உதவியை நாடி கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ராம்குமார் சாப்பிட்டு தூங்க சென்றுள்ளார். அப்பொழுது சுஜாதாவின் நண்பர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கி பயங்கரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சுஜாதா, கணேசன், மோகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.