தமிழக அரசாங்கம் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மாற்று திறனாளி குழந்தைகளை படிப்பை ஊக்குவிக்கும் விதமாக உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரை 2000, ஆறாம் வகுப்பு முதல் 8 வரை 6000, 9 முதல் 12 வரை 8000, பட்டப்படிப்புக்கு 12000, முதுநிலை பட்டத்திற்கு 14,000 ரூபாய் வழங்கப்படுகிறது.  நடப்பாண்டு முதல் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டத்தின் கீழ், பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு 50 லட்சம் ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கல்வி உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி ஆராய்ச்சி படிப்பு, பிஎச்டி மேற்கொள்ளும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கும் வருடம் தோறும் ஒரு லட்சம் விதம் 50 மாணவர்கள் பயன் பெரும் விதமாக நிதி உதவித் தொகை ஒதுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர்  தெரிவித்துள்ளார்.