
நெல்லையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எடுத்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை குறித்து அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய நிலையில் பொம்மையை பறித்து போலீசார் தீயை அணைத்தனர். இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ள நிலையில் நெல்லையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.