தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து ஆறு மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆறு மாத கால ஓய்வில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

இதற்காக வருகின்ற ஆகஸ்ட் மாதம் இறுதியில் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜனவரி மாதம் தாயகம் திரும்பியவுடன் தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.