கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 12 சிறுவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் பைக் ஓட்டி சென்றுள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர் . இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்த 12 சிறுவர்களின் பைக்கையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் .

மேலும் இதனைத் தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுவர்களுக்கு பெற்றோர்கள் பைக் கொடுத்ததாக கூறி 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் instagram-யில் அதிக லைக் வாங்குபவரே அந்த வாரத்தில் தலையாக செயல்படுவார் என்பதற்காக இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.