ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் வெற்றி குஜராத்  பக்கம் சென்றது. இந்த போட்டியானது களிமண் ஆடுகளத்தில் நடத்தப்பட்டது. இது குறித்து பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், “மும்பை அணிக்கு எதிரான மோதலுக்கு களிமண் ஆடுகளத்தை பயன்படுத்துவதற்கான முடிவு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு அணிக்குமே ஒவ்வொரு பலம் இருக்கும். எங்கள் அணியின் ஒட்டுமொத்த பலத்திற்கும் களிமண் ஆடுகளம் மிகவும் பொருத்தமானது என்று நாங்கள் நினைக்கிறேன். போட்டி செல்லும் விதத்தை பார்த்தால் 240 முதல் 250 ரன்கள் ஸ்கோர் செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். பந்துச்சாளர்களுக்கு நாம் சாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆட்டம் சமநிலையோடு இருக்கும். எல்லா ஆட்டத்திலுமே நாங்கள் 245,250 ரன்கள் அடிப்பதை விரும்பவில்லை. இவ்வளவு அதிக ஸ்கோரிங் இருந்தால் கிரிக்கெட் திறமை பறிபோகும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.