
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்யக்கூடிய நிலையில் தான் உள்ளது .காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து தேர்தலில் போட்டியிடாததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இனி தேர்தலை சந்திக்க வேண்டும். ஈரோட்டில் எதிரணி வேட்பாளர்கள் 44 பேர் டெபாசிட் இழந்ததற்கு திராவிட மாடல அரசுக்கு நன்றி. கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் முதன்முறையாக களத்திற்கு வரவில்லை. விஜய்யின் அரசியல் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 20% வாக்காளர்கள் யார் தனித்து நின்றாலும் மாற்று அணியை ஆதரித்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி என்று விஜய் கூறியுள்ளார். அவர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனித்த கோட்பாடுகள் தகர்ந்து விடும். எந்த கூட்டணி தலைமையையும் அவர் ஏற்க கூடாது.
ஈரோட்டில் பண பட்டுவாடா நடைபெற்றது என்று சீமான் சொல்வதை ஏற்க முடியாது. அதிமுக போட்டியிடாத போது அந்த வாக்கு சீமானுக்கு செல்லவில்லை. தவளை தன் வாயால் கெட்ட கதையாக உள்ளது. பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று சீமான் பேசியுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைப்பார்கள். அதிமுக அழைப்பை விஜய் ஏற்க வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகிவிடும். விஜய் அதிமுகவிற்கு செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.