
தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகின்றது. ஏற்கனவே புதிய தமிழகம், புரட்சி பாரதம் மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ மனிதநேய ஜனநாயக கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.