
அதிமுக துணை பொதுச்செயலாளர் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அதிமுக தொண்டர்களை அழைக்கவும் அதிமுக பற்றி பேசவும் ஓபிஎஸ் க்கு உரிமை இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர் ஓ.பன்னீர் செல்பம்.
அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி அமைத்தவர். பாஜகவுடன் இணைந்து அதிமுகவின் இரட்டை இலைக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ் தொண்டர்களை அழைக்க என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.