![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/9861e025-d430-4787-8643-c47e99785f4e.-.jpeg)
கடலூர் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இந்த சம்வம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் புஷ்பநாதன் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையறிந்த அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.