புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்க்கிறார். சம்பவம் நடந்த அன்று பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.