
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையபாளையம் பிரிவு அருகே தனியார் பப்பாளி ஜூஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையில் பப்பாளி சாறுகள் நிரம்பி இருந்த தொட்டியில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
முதலில் ரோகித் திகில் என்பவர் தவறி விழுந்த நிலையில், காப்பாற்ற முயன்ற அருண் குமார்கோ என்ற தொழிலாளியும் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலைகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.