
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இதை யாரிடமும் கூறக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவிகள் யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்தனர். இந்த நிலையில் மாணவிகள் படிக்கும் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அப்போது மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.