
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் பெண்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் போக்குவரத்து காவலர் பாலமுருகன் என்பது தெரியவந்தது.
பாலமுருகனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.