
திரிசூர் மாவட்டம் வெண்டோர் பகுதியில் ஏற்பட்டுள்ள சோகமான சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய ஹென்றி என்ற நபர், தனது குடும்பத்துடன் வீடு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் மசாலா தோசை சாப்பிட்டுள்ளார்.
முதலில் ஹென்றிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து ஹென்றியின் மனைவி மற்றும் 3 வயது மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆனால் சிறுமி ஒலிவியாவின் நிலை மோசமடைந்ததால், தொடர்ச்சியாக 3 மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து புதுக்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவகத்தில் வழங்கப்பட்ட மசாலா தோசையால் உணவு ஒவ்வாமை காரணமாக சிறுமி இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.