திருவாரூர் மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). இவர் விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு நிரோஷன்(7) என்ற மகனும் சியாசினி(4) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் மிளகாய் தூள் அரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அகர திருமாளம் பகுதியில் இருக்கும் மில்லுக்கு சென்றுள்ளார்.

அதன் பிறகு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பேரளம் காரைக்கால் அகல ரயில் பாதை பணிக்காக கரூரிலிருந்து ஜல்லிக்கட்டை ஒரு லாரி வந்தது. அந்த லாரி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

அந்த இடிபாட்டில் பைக் சிக்கிக் கொண்டதால் மோகன் நிரோஷன், சியாஷினி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.