
சமீப காலமாகவே சினிமா துறையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகள் நிறைய இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த நடிகை அஸ்வினி தான் சிறு வயதில் சந்தித்த மோசமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். இவர் தற்போது அமேசான் பிரைமில் வெளியான சுழல்2 வெப் சீரிஸில் நடித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், ” நான் படப்பிடிப்புக்கு எப்போதும் அம்மாவோடு செல்வேன். அன்று அவருக்கு உடம்பு சரியில்லை. அதனால் என்னோடு வரவில்லை. மேக்கப் போட பெண் கலைஞர் இருந்ததால் அவரோடு சென்றேன்.
அன்று இயக்குனர் என்னை அழைத்தார். அப்போது என்னுடன் இருந்த பெண்ணை அழைத்தேன் அவர் வரவில்லை. அப்போது எனக்கு மிகவும் சிறிய வயது. இயக்குனர் ரூமிற்குள் அழைத்து சென்று என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் அங்கிருந்து கீழே வந்ததும் உடனே வீட்டிற்கு கிளம்பினேன். என்னுடைய அம்மாவிடம் கூறினேன். அவர் மனம் உடைந்து அழுதுவிட்டார். அவரிடம் கூறி அவரையும் அழ வைத்து விட்டோமே என்று கஷ்டம் அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் எந்த பட இயக்குனர் என்பது குறித்து அவர் கூறவில்லை.