உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் முஸம்மில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மொபைல் கவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற முஸம்மில் மாலை நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து முஸம்மில் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பற்காபூர் பகுதியில் இருக்கும் கால்வாய்க்கு அருகே ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது இறந்து கிடந்தால் வாலிபர் காணாமல் போன முஸம்மில் என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மர்ம நபர்கள் கழுத்தை அறுத்தும், அவரது ஆணுறுப்பை சிதைத்தும் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அர்ஹான் அவரது நண்பர் குட்டு ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் குற்ற செயலை ஒப்புக்கொண்டனர். முஸம்மில் அர்ஹானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனால் முஸம்மிலுக்கும் அர்ஹானிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அர்ஹானி தனது நண்பருடன் இணைந்து முஸம்மிலை கொலை செய்தது தெரியவந்தது.