தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் விடுபட்ட நாட்களை வேலை நாட்களாக ஈடு கட்டுவதற்கு சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாகும். எந்த பள்ளியும் அரை நாள் நடத்திவிட்டு விடுப்பு அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.