தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இந்த படத்திற்கு பிறகு விஜய், கமல், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். புன்னகை அரசி, சிரிப்பழகி என்றும் ரசிகர்கள் சினேகாவை கொண்டாடினர், இவர் கடந்த 2012 ஆம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சினேகா ஒரு பேட்டியில், தன்னுடைய உடையால் அசிங்கப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து கூறியுள்ளார். அதில்,  நான் ஒரு முறை பயன்படுத்திய ஆடையை மறுபடியும் அணிய மாட்டேன். காரணம் ஒரு முறை அணிந்த உடையை மீண்டும் அணிந்து ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது ஒரு மீடியா பக்கத்தில் எனக்கு உடை இல்லை அதனால் அணிந்த ஆடையை மீண்டும் அணிந்து வந்திருக்கிறார் என்று எழுதினார்கள். அன்று முதல் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணியக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். நான் எடுப்பது அனைத்துமே விலைகூடுன ஆடைகள். ஆனால் ஒரு முறை அணிந்து விட்டால் நண்பர்களுக்கும், யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.