
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் 1.16 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு வருடம் நிறைவடைந்ததால் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் மற்றும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆகியோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தற்போது சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த முறை பொங்கல் பண்டிகை வருவதால் முன்கூட்டியே பணத்தை வரவு வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி நாளை பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசு தொகு ப்பாக வழங்கப்படும் நிலையில் இந்த முறை நிதி பற்றாக்குறை காரணமாக அரசு வழங்காதது எனறு அறிவித்துள்ளதால் மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வரவு வைக்க திட்டமிட்டுள்ளது.