நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சாசனம் குறித்த விவாதத்தின் போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அம்பேத்கர் குறித்த சர்ச்சையாக பேசியதாக கூறி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தற்போது எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. அதாவது நாடாளுமன்றத்தில் பேசும்போது அமித்ஷா இப்போது அம்பேத்கர் அம்பேத்கர் என்று கூறுவது பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு தூரம் சொல்லி இருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக் கொள்வதில் பாஜகவுக்கு மகிழ்ச்சி தான். அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சிகள் பேச வேண்டும் என்றார். அவருடைய இந்த பேச்சை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விளாசி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயையும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சுதந்திர காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்து போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை அவர், அம்பேத்கர் அம்பேத்கர் என்று அவருடைய பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம். எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை கடுமையாக கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.