ஆடி மாதத்தில் மூத்த குடிமக்களை அம்மன் கோவில்களுக்கு கட்டணம் இல்லாமல் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை புதிய ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லையாகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு ஆயிரம் மூத்த குடிமக்கள் அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

வருகின்ற ஜூலை 19, 26, ஆகஸ்ட் 2,9 ஆகிய நாட்களில் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.