விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆயில் மில் காலணியில் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தச் சிறுமி பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கட்டிட தொழிலாளியான தங்கவேல் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தங்கவேலை கைது செய்தனர்.விசாரணைக்கு பிறகு தங்கவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.