திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொங்கு நகர் பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சந்தோஷ்(29) என்பவரை கைது செய்தனர். சந்தோஷ் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். விசாரணைக்கு பிறகு போலீசார் சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.