
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் திறந்த முதல் நாளிலேயே மூன்று கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ராமஜன்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை இதனை உறுதி செய்துள்ளது.