தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை இருக்கிறார். இவர் முன்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தன் கருத்தை தைரியமாக கூறும் அண்ணாமலை தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிக்க அண்ணாமலை லண்டன் செல்கிறாராம்.

இந்தியாவில் இருந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக 12 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் அண்ணாமலையும் ஒருவர் என்றும் அவர் விரைவில் லண்டன் செல்ல இருக்கிறார் என்றும் கடந்த வாரமே தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு படிப்புக்காக செல்வதால் மேல் இடத்தில் அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வு வேண்டும் என அவர் கடிதம் கொடுத்துள்ளதாகவும் அவருடைய கடிதம் குறித்து இதுவரை மேலிடம் முடிவெடுக்காததாகவும் கூறப்படுகிறது. மேலும் அரசியலில் இருந்து தற்சமயம் ஓய்வெடுக்கும் அண்ணாமலை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.