
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானியச் சிற்றுண்டி’ வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும்.
மேலும் மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.