தமிழக அரசு இனி அரச ஊழியர்களும் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ரூ‌.5 லட்சம் வரை அறுவை சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். அதோடு ரூ.10 லட்சம் வரையில் சிறப்பு சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் உயர்தர சிகிச்சையில் நீடித்து வந்த சிக்கல் தீர்ந்ததாக பயனாளிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.