![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/07/987600.jpg)
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ள நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூலை 3 நாளை முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை எட்டாம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.