கோவையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த முருக பூபதி (36) என்ற நபர் பேருந்து ஓட்டி வந்தார். திங்கட்கிழமை அதிகாலை விருதுநகர் மற்றும் சாத்தூர் நான்கு வழி சாலையில் வச்ச காரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தில் பக்கவாட்டு சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த புவனேஸ்வரி சற்று நேரத்தில் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுனர் முருக பூபதி உள்ளிட்ட 37 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.