சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக  தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என்று   தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் அதினவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.