
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வட தமிழகம், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இதேபோன்று நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.