
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மிதமான மழை பெய்து வருகிறது .இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படிசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் , தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.