தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் .அதன் பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.  இந்த நிலையில் ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரத்து செய்ய போவதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேசியது வைரலாகி வருகிறது.

அதாவது கணவன் மனைவியாக இருக்கும் அனைவருமே என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும். ஆனால் தற்போது இருப்பவர்களுக்கு இது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஆர்த்தி – ஜெயம் ரவி இருவரின் குடும்பம் நல்ல குடும்பம். இதுவரையில் எந்த விதமான கிசுகிசுக்குகளும் வெளியாகவில்லை. ஜெயம் ரவி தான் ஆர்த்திக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் ஆர்த்தி பக்கம் இருந்து எந்த விதமான பதிலும் வெளிவரவில்லை. அவர் சேர்ந்து வாழ்வதற்கு தயாராக இருக்கிறார். இந்த விஷயம் இன்னும் ஒரு வாரத்தில் வெளிவந்து விடும். ரவி சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலத்தில் அழகாக இருப்பார். இதனால் சூப்பர் ஸ்டார் மகளை தான் திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி வெளியாகியது. ஆனால் ஆர்த்தி அம்மா ரவி மிகவும் அழகாக இருந்ததால் அவரை அவருடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஜெயம் ரவியை வளைத்து போட்டு திருமணம் செய்து வைத்தார் என்று கூறியுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள்  அப்போ ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு உறுதியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.