சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அருள்ராஜ் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இவருடன் அருள்ராஜ் பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.

அதோடு சிறுமியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் பெருகாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.