
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் ஆடி கிருத்திகை திருவிழா வருகின்ற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்டு ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம் மற்றும் திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்படும். அரக்கோணத்தில் இருந்து 25 மற்றும் திருப்பதியில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்படும் எனவும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணிக்கு தலா 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.