
பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(54). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரனின் உடன் பிறந்த தம்பிகள் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது பிரபாகரனின் தம்பி ஜெயக்குமார், செல்வன் ஆகியோர் பிரபாகரனுடன் தகராறு செய்தனர். மேலும் பிரபாகரனை சரமாரியாக அடித்து தான் வளர்க்கும் நாயை ஏவி விட்டு கடிக்க வைத்ததாக தெரிகிறது.
அந்த நாய் பிரபாகரனின் ஆணுறுப்பை கடித்தது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயக்குமார், செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்