வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டரை மானிய விலையில் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த தொகை வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு வாடிக்கையாளர் வங்கி கணக்கிலும் கேஸ் இணைப்பிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருப்பது அவசியமாகும். அப்படி இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மானிய தொகை வரவு வைக்கப்படும்.

கேஸ் இணைப்புடன் ஆதார் சேர்க்க கேஸ் நிறுவன இணையதளம் சென்று விண்ணப்பம் இரண்டை பதிவு செய்து விவரங்களை பூர்த்தி செய்து அடையாளச் சான்றுடன் இணைத்து நேரில் அல்லது தபாலிலோ அனுப்பலாம். 1800-2333-555 என்ற எண்ணை அழைத்தும் ஆதாரை இணைக்கலாம். அவரைப் போலவே www.rasf.uiadai.gov.in என்ற இணையதள பக்கம் சென்று அதில் உள்ள வழிமுறையை பின்பற்றியும் ஆதார இணைத்து மானியம் பெற முடியும்.